4/10/2011

நான் செத்து செத்து பிழைக்கிறேன்


நான் நினைத்த காதல்
நீ அறிந்த போதும்

நானத்தில் குனிந்து
கோலம் இட்ட போதும்

தேன் இனிக்கும் உதட்டில்
தீந் தமிழ் நழுவும் போதும்

குளிர் நிறை கண்கள்
மடல் விசுறும் போதும்

காணமுடியா இடை
தாளமிடும் போதும்

காற்றிலே சேலை
வானவில்லான போதும்

நான் செத்து செத்து பிழைக்கிறேன்
உனை தொட்டுவிட துடிக்கிறேன்

16 comments:

Lingeswaran said...

தமிழ் மழையில் நனைந்த காதல்...!

நிரூபன் said...

காணமுடியா இடை
தாளமிடும் போதும்//

சந்த நடையில் அழகாக வந்துள்ள கவியில்......

காணமுடியா இடை
தாளமிடும் போதும்//


இவை தான் கவிதையின் கற்பனைத் திறனுக்கு உச்சாணியான வரிகள்.

நிரூபன் said...

காணமுடியா இடை
தாளமிடும் போதும்//

இடையின் பின் பின்னழகில்,
இரண்டு குடத்தைக் கொண்ட
புதிய தம்புராவை.... என
டீ.ராஜேந்தர் வர்ணித்தார்,

ஆனால்...நீங்களோ
காணமுடியா இடை
தாளமிடும் போதும்//

எனக் கவியில் கொடியிடையின் மூலம் கற்பனையின் உச்சத்திற்கே சென்று விட்டீர்கள்.

Unknown said...

காதல் மயக்கம் கவிதையின் அத்துணை வரிகளிலு...
அருமை சகோ..

Unknown said...

எமது வலைப்பூவில் நீங்கள் பின்னூட்டம் இடும் போது, அதிலுள்ள சுயவிபரம் வழி உங்கள் வலைப்பூவுக்கு வர இயலவில்லை. ஏன்? பெரும்பாலும் சுயவிபரம் வருவதில்லை.. ஏன்?

Unknown said...

நீங்கள் புதிய பதிவுகள் இடும் போது, மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்த முடியுமா?

அப்பாதுரை said...

காண முடியாத இடையின் தாளம் எனக்கும் பிடித்தது

அப்பாதுரை said...

டி.ராஜெந்தருக்கு பாட்டெழுத வருமென்று தெரியும்; கவியெழுத வருமென்று இதுவரை தெரியாது. புதிய தம்புரா - பிரமிக்க வைத்தது. நன்றி நிரூபன்.

சி.பி.செந்தில்குமார் said...

கவிதை நல்லாருக்கு.. ஆனா சினிமா ஸ்டில் வேணாம்..

kowsy said...

ஐயோ...ஐயோ.... போதும் போதும் காதல் விழிம்பில் நின்று காட்சிப்படுத்தும் வரிகள் . செத்துச்செத்துப் பிழைக்கவேண்டாம். கிட்டக்கிட்ட நெருங்க வேண்டும்.

Anonymous said...

யாதவன் ஒரு மாதிரியாத்தான் இருக்கீங்க..

ஹேமா said...

சரி...சரி...இதுக்கெல்லாம் சாகக்கூடாது யாதவன்.வாழவேணும் சேர்ந்து !

mycollections said...

அருமையான கவிதை.

Unknown said...

செத்துப் பிழைத்தேன்... கவிதையை படித்து அல்ல.
தாக்கத்தால் அவள் நினைவுகளில்.

ம.தி.சுதா said...

/////காணமுடியா இடை
தாளமிடும் போதும்////

அடடா உங்களுக்கு கண் தான் குருடு என்றாலும் பரவாயில்லை காதாவது நல்லா கேட்குதே... ஹ..ஹ.. நல்ல உவமான வரிகள் அண்ணா...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)

Anonymous said...

அப்பப்பா!..என்னே ..ஒரு காதல்!.....ரெம்பத் தான் கஷ்டப் படறீங்க போங்க!......
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com