7/19/2009

ஏக்கத்தின் எல்லை



திரும்பிப்பார்த்தேன்

சரிகை சருசருக்கநடக்கிறார்கள்

எத்தனை வீடுகள் ஏறிஇறங்கியிருப்பர்

என் அகராதியில் எழுதப்பட்டுவிட்டது

எனக்கு ஏமாற்றம்தானென்று

இருந்தும் ஒரு நப்பாசை

என்னையும் பிடிக்குமென்று

என் உழைப்பில்தான்

எங்கள் குடும்பம்

ஒவ்வொறுமுறையும்

தட்டங்கள் நிரப்பவே

சேமித்தபணம் செலவளிந்துவிடும்

சிரித்தமுக்துடன்

வாசல்படிஏறிவந்து

கதைத்துப்பேசி

பலகாரங்களைத்தின்றுவிட்டு

பசுமையான எங்கள் குடும்பம்போன்ற

வெற்றிலையை கையிலெடுத்து

என்வாழ்க்கை போன்ற

காய்ந்த பாக்கை அதற்குள் போட்டு

வெள்ளைமனசு சுண்ணாம்பை

மெதுவாகத்தடவி

ஒரேசுருட்டுசுருட்டி

வாய்க்குள்போட்டு அரைத்துவிட்டு

போகுமபோது வாசலில் துப்பிவிடுவர் சிவப்பாய்

என் வாழ்க்கையையும் சேர்த்து.

11 comments:

sakthi said...

வாய்க்குள்போட்டு அரைத்துவிட்டு

போகுமபோது வாசலில் துப்பிவிடுவர் சிவப்பாய்

என் வாழ்க்கையையும் சேர்த்து.

அசத்தல்

கவிக்கிழவன் said...

Thanks Sakthi

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

//போகுமபோது வாசலில் துப்பிவிடுவர் சிவப்பாய்
என் வாழ்க்கையையும் சேர்த்து.//
கவிதை சிந்திக்க வைக்கிறது. அழகு.
ஒரு முறை என் வலையத்துக்கு வாருங்கள். ஒரு செய்தி காத்திருக்கிறது.

த.பிரகாஷ் said...

அழகான கவிதை. தங்களின் படைப்புகள் அனைத்தும் மிக அழகாக உணர்ச்சிப் பூர்வமாக வடித்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்!

நிலாமதி said...

பெண் பார்க்க வந்து மறுதலித்து போகும் , மாப்பிள்ளை வீட்டுக்காரராக இருக்கவேணும் .இக்கவிதை. பெண்ணின் மன ஏக்கத்தை காட்டுகிறது

நிலாமதி said...
This comment has been removed by the author.
கவிக்கிழவன் said...

Thnaks நிலாமதி த.பிரகாஷ் ஜெஸ்வந்தி sakthi

ஹேமா said...

வணக்கம் கவிக்கிழவரே.இன்றுதான் உங்களைக் கவனித்தேன்.அதுவும் நீங்கள் என்வீடு தேடி வந்திருந்தபடியால்.
அருமையாக இருக்கிறது உங்கள் வீடு.

பெண்பார்க்கும் படலத்தை அற்புதமாகச் சொல்லியிருக்கு கவிதை வரிகள்.இன்னும் வருவேன்.

விஜய் said...
This comment has been removed by the author.
விஜய் said...

ரொம்ப ரொம்ப ரொம்ப ரசித்தேன்

கன்னியின் கனவு வலியை

வாழ்த்துக்கள்

விஜய்

அகல்விளக்கு said...

உணர்வுப்பூர்வமான கவிதை...

மனதை கனக்கச் செய்கிறது நண்பா....