12/08/2014

தொட்டு உன்னை எழுப்புவேன்


காலையில் கதிரவன்
எழ முன்பே
கண்முளிப்பேன்
உன் முகம் முன்பே


கண்கள் மூடிய
உன்முகத்தை
நெஞ்சில் பதித்துவிட்டு
சொண்டில் சிரிப்புடன் செல்வேன்


காலை தேநீரை கையிலெடுத்து
சேலை தலைப்பால் பொத்திவைத்து
கட்டிலருகே வந்து நின்று
தொட்டு உன்னை எழுப்புவேன்


கண்கள் முழித்து எழும்பி
என்னை பார்த்து சிரித்து
எந்தன் கையால் தேநீர்வாங்கி
எனக்கே நீ பருக்கிவிடுவாய்


இந்த தருணம் ஒவ்வொருநாளும்
கிடைக்கவேண்டும் என்றெண்ணி
கடவுள்முன் கைகூப்பி
கலங்கி மன்றாடி நிக்கிறேன்



1 comment:

Anonymous said...

this site looking so nice. lots of good contents are available here. nice creation works are implemented here. the site is needs some seo works. for more seo works please contact us here.

www.shrietech.com