12/16/2012

காதல் கள்வனுக்கு தண்டனை


அறியாத வயதில்தான் 
இதயம் 
தவறி விழுந்திருக்க வேண்டும் 
தவறி விழுந்தாளும் 
சரியான இடத்தில் விழுந்ததுக்கு 
இறைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் 

தானாக தவறி விழுந்ததா 
நானாக தவற விட்டேனா, என்பதில்
இன்னும் சந்தேகம் எனக்கு 

எதுவாக இருந்தாலும் 
நான் என் கட்டுப்பாட்டில் 
இருந்ததாகவே 
நினைத்துக்கொண்டிருக்கிறேன் 
என் கள்வன் 
என் இதையத்தை
களவெடுத்தது தெரியாமலே 

இருந்தும் களவுபோனதை 
காட்டிகொள்ளாமலே  காதலிக்கிறேன் 

அவனை என் பின்னால் 
அலைய விட்டு பார்ப்பதில் 
அலாதி பிரியம் 

கள்வனுக்கு இதுவே 
தண்டனை 

3 comments:

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
மனம் கவர்ந்த கள்வனுக்கு
இதுதான் சரியான தண்டனை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

Seeni said...

arumai....