7/15/2012

கரையில் காத்து நிற்பதோ


வானம் கண்மூடியதால்
மேகம் இருட்டானதோ
மேகம் கைவிட்டதனால்
மழை நீர் நிலம் தொட்டதோ

பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ

கடலில் அலை செல்வதால் - என்
காதலும் அலைகின்றதோ
அலைகள் கரை தட்டுவதால் - நான்
கரையில் காத்து நிற்பதோ



9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல சிந்தனை நண்பரே ...!
அணைக்காததாள்->அணைக்காததால், தட்டுவதாள்->தட்டுவதால் --- இவைகளை மாற்றி விடவும். வாழ்த்துக்கள்... நன்றி...

கவி அழகன் said...

Nanri thilare

Athisaya said...

நல்ல படைப்பு...நியாயமான கேள்விகள்.இந்த சிந்தனைகள் தான் வாழ்தலை அழகுபடுத்துகிறது.வாழ்த்துக்கள் சொந்தமே.!

ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

Yaathoramani.blogspot.com said...

வித்தியாசமான சிந்தனை
அருமையான படைப்பு
தொடர வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

நல்ல கவிதை வாழ்த்துகள்

Anonymous said...

''...பூமி அணைக்காததால்
வெள்ளம் நதி சென்றதோ
நதிகள் வளைவென்றதால் - அது
வழுக்கி கடல் சென்றதோ ..'

நல்ல வரிகள். நல்வாழ்த்து. வேதா. இலங்காதிலகம்.

அம்பாளடியாள் said...

ஓர் அழகிய சிந்தனை வாழ்த்துக்கள் சகோ தொடருங்கள் .

vimalanperali said...

அலைகள் கரை தட்டுவது இயற்கை,நாம் கரை காத்து நிற்பது நம் தேவைக்காக,
காத்து நிற்பதும்,கரை தட்டுவதும் வெவ்வேறாகவே சொல்லிச்
செல்லப்படுகிறது.நன்றி வணக்கம்.நல்ல் கவிதை. வாழ்த்துக்கள்.

Radha rani said...

நல்ல சிந்தனை..அருமையான கவிதை.