1/22/2012

சோடி சேரும் நாளை எண்ணி

உன் ஈர விழியில்
ஒரு துளி

நான் ஏங்கி தவிக்கிறேன்
தனிமையில்


என் தனிமை தாங்கும்
மர நிழல்

உன் சோகம் சொல்லும்
கார்முகில்
ஊஞ்சல் ஆடும்
இருமனங்கள்

சேர துடிக்கும்
இரு நிறங்கள்


பாசத்தோடு
அருகில் இருந்து

உச்சி நெத்தி கோதும்
உண்மை காதல்


கரம் பிடித்து
இதழ் குவித்து

சோடி சேரும்
நாளை எண்ணி

16 comments:

வலையுகம் said...

ராசா என்ன சொல்ல வர்றீங்கே
புரியாலே...முடியாலே

Yaathoramani.blogspot.com said...

படங்களும் அதற்கான விளக்கப் பாடல்களாக அமைந்த
கவித்துவமிக்க வரிகளும் அருமை
தொடர வாழ்த்துக்கள்

சித்தாரா மகேஷ். said...

காத்திருப்புக்கள் என்றும் இனிமையானவை தோழா.வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

அழகான துளிப்பாக்கள்..

குணசேகரன்... said...

இதெல்லாம் யாருக்கு சொல்ல வர்ரீங்க நண்பரே...? anyway..நல்லாருக்கு..

kowsy said...

நல்ல கவிதை வாழ்த்துகள்

ஹேமா said...

மனதில் குமையும் ஏக்கம் !

குறையொன்றுமில்லை. said...

காத்திருப்பின் வலியை கவிதையில் அழகா சொல்லி இருக்கீங்க. வாழ்த்துகள்.

rajamelaiyur said...

அருமையான கவிதை நண்பா

Unknown said...

கவிதைப் பாடல் -அதை
காட்டும் படங்கள்
கவிதை காதல்-இரண்டு
கண்களின் மோதல்
கவிதை சாரம்-நல்ல
கற்பனை ஊரும்
கவிதை அழகன்- சொல்லும்
காதலும் அழகே!

புலவர் சா இராமாநுசம்

திண்டுக்கல் தனபாலன் said...

படமும், உங்களின் கவிதை வரிகளும் அருமை! நன்றி நண்பரே !

தனிமரம் said...

காத்திருப்பின் அவஸ்த்தையைச் சொல்லி ஏங்க வைக்கின்றீர்கள் கவி அழகனே.
சில இடைவெளியின் பின் தொடர்கின்றேன்  நலம்தானே? 

ad said...

என்னையா ஒரே பீலிங்கு???
ஓவரா பீல் பண்ணாதீங்கப்பா.
என்ஜாய்....!!!

vetha (kovaikkavi) said...

ஏனய்யா இந்த ஏக்கம்? காலம் வரும் போது கனியும் தானே வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

நிரூபன் said...

வணக்கம் நண்பரே,
சோடி சேரும் நாளை எண்ணித் தவிக்கும்/
எண்ணி வாடும் கவிக் கிழவனின் உள்ளத்து உணர்வுகளை கவிதை சொல்லி நிற்கிறது.
அழகிய கவி.

இராஜராஜேஸ்வரி said...

என் தனிமை தாங்கும்
மர நிழல்

உன் சோகம் சொல்லும்
கார்முகில்

அழ்கான கவிதை.. பாராட்டுக்கள்..