11/13/2011

இலட்சியம் என்பது வேசங்கள்



இலக்குடைந்த
பயணங்கள்
பாதை தோறும்
பள்ளங்கள்
இடர் நிறைந்த
வாழக்கையில்
இலட்சியம் என்பது
வேசங்கள்

பசி நிறைந்த
மேனியில்
உயிர் பிழைக்கும்
மூச்சுக்கள்
உடல் களைத்து
உழைத்தாலும்
சொற்பமாக வரும்
காசுகள்

உடல் விரும்பி
உளம் விரும்பி
துணை விரும்பி
குழந்தைகள் - அவர்
மனம்விரும்பி
நடப்பதற்கு
மரணத்தை தொடும்
வேலைகள்

உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் - அந்த
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள்

20 comments:

MANO நாஞ்சில் மனோ said...

கொடுமை கொடுமை வறுமை கொடுமை...!!!!

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
பாரதி கொண்ட அதே கோபம்
உங்கள் கவிதையிலும்...
தொடர வாழ்த்துக்கள்
த.ம 2

குறையொன்றுமில்லை. said...

உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் - அந்த
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள்


என்ன அழுத்தமான வரிகள்.

Anonymous said...

விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள் //

ஆதங்க வரிகள்...

நல்லாயிருந்தது...

M.R said...

உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் //

நியாயக் கேள்வி இரக்கமுள்ள அனைவர் உள்ளத்திலும் எழும் கேள்வி


த.ம 4

SURYAJEEVA said...

உலகம் தோன்றி
உயிரும் தோன்றி
தனி மனித
சுயநலம் தோன்றி
பிறந்து வந்தது
வறுமை...
அதை புரிய வைப்பது நம்
கடமை

ஹேமா said...

ஊரில் இருக்கும்போது புரியாத அல்லது தோன்றாத விஷயங்கள் நாட்டைவிட்டு வெளியேறினபிறகுதான் யோசிக்க வருது யாதவன்.எனக்கும்தான் !

இராஜராஜேஸ்வரி said...

உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் -
கனமான கேள்வி!???

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
மனப்பூர்வ வாழ்த்துகள்.

Rajslog said...

Nice kavithai. and also nice blog

vimalanperali said...

நல்ல கவிதை.வாழ்த்துக்கள்.நிறைய எழுதுங்கள்

துரைடேனியல் said...

Kavithai azhagu.

TM 9.

அம்பலத்தார் said...

கவி அழகனின் கோபம்கூட அழகாகத்தான் இருக்கிறது

நிலாமதி said...

ஏழைகளிடம் இல்லாதது பணம் பணக்காரரிடம் இல்லாதது மனம்............இதனால் உலகில் வறுமை.

Unknown said...

காதல் பாதை மாறி
தத்துவ பாதை ஏறி
ஓதல்கவிதை கண்டேன்
உள்ளதிலுவகை கொண்டேன்

புலவர் சா இராமாநுசம்

ADMIN said...

///உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் - அந்த
விடையை தேடி
ஓடி ஓடி
உயிரை மாய்க்கும்
ஏழைகள்///

இதயத்தை ஊடுருவிச் சென்ற வரிகள்..!!

உங்கள் கவிதைகள் ஒவ்வொன்றும் உயர்வாய் இருக்கிறது.. உவகையுடன்

உங்கள்,

தங்கம்பழனி

மாய உலகம் said...

வறுமையைப் பற்றி அருமையான கவிதை...

இராஜராஜேஸ்வரி said...

உலகை படைத்தான்
உயிரை படைத்தான் - ஏன்
வறுமை படைத்தான்
இறைவன் /

ஏழ்மையைப் படைத்தவன்
இறைவன் என்றால்
இறைவன் என்பது எதற்காக?? எதற்காக??

ரிஷபன் said...

கவிதை காட்டும் கோபம் கொப்பளிக்கிறது வரிகளில்.

vetha (kovaikkavi) said...

''...ஏன்
வறுமை படைத்தான்
இறைவன்...''
இதை இறைவன் படைத்தானா? மனிதன் உருவாக்கினானா என்று நான் யோசிக்கிறேன்....வாழ்த்துகள் கவிஅழகன்.
வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com