
அடியேய் என் செல்லக்குட்டி – உன்
கண்கள் என்னைக் கொல்லுதடி
விடியும்வரை காத்திருந்து
விழிகள் இரண்டும் வேர்க்குதடி
உடையாய் உன் இடை வருடி - உன்
கால்கள் இரண்டிலும் நடை பழகி
விடையே தெரியா காதலுக்காய்
காத்திருப்பேன் என் கன்றுகுட்டி
சுவரே இல்லா சித்திரமாய் –என்
காதல் சுழன்று துடிக்குதடி
கலரே இல்லா என் வாழ்வில்
தூரிகை தந்து உதவிடடி
படியே தாண்டா பத்தினியாய் – உன்
பார்வை ஏன் கீழே போகுதடி
தவியாய் கிடந்தது தவிக்கின்றேன்
கொஞ்சம் பாசம் தந்து கொன்றுடடி
Tweet | |||||