ஒரு சொட்டு நீர்த்துளி
உன் ஈரக்கூந்தலில் இருந்து
என் நெற்றிபொட்டில் பட்டுத்தெறிக்க
சோம்பலை முறித்து
கண்விழித்து பார்க்க
வட்ட பொட்டு உன் நெற்றியில்
வண்ணமாய் ஜொலிக்க
தாலிக்கயிறு கழுத்திலே
வட்டமாய் நெளிய
ஈரத்துணியினால்
கூந்தல் சுற்றிகட்டி
கழுத்திலே
மிச்ச குங்குமத்தை ஒற்றி
உதட்டிலே
சிரிப்பை மட்டுமே வைத்து
காதில் பிடித்துதிருகி
காலை வணக்கம்
சொல்லும்போதே
தோற்றுவிட்டேன் உன்னுடன்
வீட்டுக்கு அழகு பெண்ணிடம்
Tweet | |||||
1 comment:
வீட்டு அழகு மட்டுமா??
Post a Comment