மேனியை தொட்டும் தொடாமலும்
பட்டுச்செல்லும் இதமான
இனிய காலைப்பொழுதில்தான்
என் தேவதைக்கான நேரம்
குறிக்கபட்டிருந்தது
என்ன சந்தோசம்
குயில்களும் குட்டி குருவிகளும்
மலர்களும் வஞ்சனை இல்லாமல்
முகத்தை மலர்ந்தே வைத்திருந்தன
பேருந்து தரிப்பிடத்தில்
தனியாகத்தான் காத்திருந்தேன்
அனாலும் நான்
தடக்கி விழுந்துவிட்டேன்
சில்லென்ற மெல்லிய காற்று
முகவுரை வாசிக்கும்போதும்
நான் கேட்க்கவில்லை
பரவாயில்லை என் நெஞ்சுக்குள்
நீ முழு உரையையும் வாசித்துவிட்டாய்
இதுவரை என் மனதினில்
தோன்றாத வரிகளை தோன்றவைத்தாய்
நீ அழகிதான் இருந்தாலும்
மலர்களும் முழு நிலவும் உன்னுடன்
போட்டி போட்டு நிக்கின்றன
இருந்தும் உன் சிரிப்பால்
அனைத்தையும் கொள்ளையடித்துவிடுகிறாய்
அது போதும் எனக்கு
நான் ஆனந்தப்பட
இருந்தாலும் திமிர்பிடித்த
உன் கூந்தல்கள்
அங்கும் இங்கும் ஆடும்போது
எனக்கு நெஞ்சுக்குள் பயம்தானடி
பேரூந்தும் வந்துவிட்டது
இன்றும் நான் மௌனித்த நினைவுடனே
ஆனாலும் போராடாமல்
உன் பார்வை ஒன்று கிடைத்த
சந்தோசத்தில் பயணிக்கிறேன்