8/10/2010

தாசியான தமிழினம்

கதறிய உள்ளங்களில்

கிளறிய வேதனைகள்

புகைந்து சாம்பலாகமுன்

முட்கம்பி வேலி வாழ்வானது


முடங்கிய உணர்வுகளில் - புது

உணர்ச்சிகள் வரமுன்னர்

சிதைந்தது எண்ணங்கள்

உயிர் கலைந்த சாவுகள்


உடலிருக்கு உயிர் இருக்கு

நரம்பிருக்கு எலும்பிருக்கு

உணர்வு தொலைத்த வெறும் கோதுகள்

இரத்தமில்ல உயிர் கோலங்கள்


கடலிருக்கு வயலிருக்கு

குளமிருக்கு நிலமிருக்கு

தொடமட்டும் முடியாத நாதாரிகள்

தொட்டாலும் கொன்றுவிடும் சூதாடிகள்


மூச்சுமட்டும் எடுக்கமுடியும்

முகம்கூட சுளிக்கமுடியா

முகம் இருக்கும் முழு முண்டங்கள்

மனம் முழுக்க இரத்த வாடைகள்


என் நிலமிருக்கு தொழிலிருக்கு

சுய கௌரவம் நிறைய உண்டு

பொத்திட்டு இருடா பரதேசி

நான் உன்னை ஆளும் இனவாசி


நான் பொருள் தருவேன்

பொதி தருவேன்

பொத்திட்டு வாங்கடா

என் ஆட்சியில் நீ தாசி

8/09/2010

காதலால் உருகி கண்ணீர் மல்கி



விழிகளின் கதிர்களில் ஏக்கம்

விரும்பியே துடிக்குது இதயம்

உதடுகள் உரசிடும் பருவம் - மனம்

காதலால் குளைந்த அருவம்


பார்கமுன் முடிக்கவா வெட்கத்தை

முடித்தபின் பார்கவா மிச்சத்தை

நினைக்கமுன் ஏங்குது கனவுகள்

நினைக்கவே மயக்குது வனப்புகள்


தடுப்பது மனம்தான் மறந்துவிடு

தற்பொழுது காதலை பெற்றுவிடு

கண்ணை மூடினால் உலகம் இருட்டு

காதலில் விழுந்தபின் கண்கள் குருடு

8/02/2010

காதலா



கொஞ்சி கொஞ்சியே

குலையவைக்கும்

உன் காதல்

நெஞ்சதூடு இதயம் தேடும்

உன் கண்கள்

மிச்சமின்றி

சுவாசித்து முடிக்கும்

உன் மூக்கு

சத்தமின்றி சல்லடைபோடும்

உன் சிரிப்பு

வெட்கமின்றி சொல்லுகிறேன்

காதலா

எனை வென்றுவிட்டு போவதே

என் வாழ்வடா

7/29/2010

புதிதாய் காதலிப்பதற்கு



அடிக்கடி கோபம் போடுகிறேன்

ஒவ்வொருமுறையும்

புதிதாய் காதலிப்பதற்கு


அடிகடி விடைபெறுகிறேன்

தவிப்பில் ஓடிவந்து

கட்டியணைப்பதற்கு

7/27/2010

கன்னக்குழியில் காதல்



உன்னை நினைத்து சிரிக்கையில்
கன்னக்குழியில்
காதல் நிறைகிறது

7/20/2010

நட்பு



நடப்புக்கு முள்ளுக்குதினாலே
நான் நனைவேன்
கண்ணீரால்

7/18/2010

அன்புள்ள அன்னையே




உணர்ந்தேன் உன் உதிரமே பால் ஆவதை

மகிழ்ந்தேன் உன் உயிரே நானானதை

தொழுதேன் உனை தாயிலும்மேலாகவே

அன்புள்ள அன்னையே

7/13/2010

என் காதல் சோகம் எனக்கு மட்டும்தான்



7/08/2010

தோழியின் நினைவில்

7/05/2010

காதல் நிலைத்திருக்கும்