அச்சடித்த புத்தகத்தில்
பச்சை குத்திய என்இதயம்
பார்த்தவுடன் கவர்வதில்
அட்டைப்படம் உன்வர்க்கம்
பக்கம் தட்டும் விரல்களில்
ஏங்கவைக்கும் உன் எண்ணம்
வளைந்தோடும் இடைவரியில்
விரிந்து கிடக்கும் கதையம்சம்
விமர்சனம் இல்லா பார்வையில்
முகவுரை சொல்லும் முத்தம்
இலக்கணம் இல்லா இரவுகளில்
இலக்கியம் படைத்திடும் என்விருப்பம்
Tweet | |||||