2/01/2009

உயிர் யாருக்கும் சொந்தமாகலாம்.


................................................................

நெருப்பின் கண்களை குருடாக்கி

அநியாயம் நடக்கிறது

பொய்களை உண்மையாக்கி

ஊமை மனங்களை நெருக்கிறது

உதடுகள் பேச துடிக்கும் போது

கண்கள் தடுக்கிறது

கண்களால் தானே காண முடிகிறது

உண்மைகளை கூட கொல்வதை

உடல்கள் எங்களுக்கு தான் சொந்தம் - ஆனால்

உயிர் யாருக்கும் சொந்தமாகலாம்.
.............................................................................

2 comments:

ஆனந்த். said...

நன்றி

ரசிக்கும்

கவிதை

ஆனால் சற்று காரம்.

நட்புடன் ஜமால் said...

நல்ல வலிகள் சொல்லும் வரிகள்